ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்
பாகம் – 16
السند والإسناد
ஸனத் السند – அறிவிப்பாளர் தொடர்.
உதாரணம் :-
இமாம் புஹாரி(ரஹ்) முதல் நபி (ஸல்) அவர்கள் வரை.
இஸ்னாத் الإسناد – ஒரு அறிவிப்பாளர் தான் யாரிடமெல்லாம் கேட்டார் என்ற தொடரை அறிவிப்பது.
சனத் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
அறிவிப்பாளர் தொடர் السند
முஹம்மத் நபி (ஸல்)
ஸஹாபாக்கள்
தாபியீன்கள்
தபஅ தாபியீன்கள்
இமாம் புஹாரி அவர்களுடைய ஆசிரியரின் ஆசிரியர்
இமாம் புஹாரி அவர்களின் ஆசிரியர்
இமாம் புஹாரி
அறி்ஞர்கள் இவர்களை பல்வேறு விதமாக பிரிக்கிறார்கள். அதை தபகா الطبقات என்று கூறுவர்.
ஸஹாபாக்களில் பத்திற்கும் மேற்பட்ட தபகாக்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
உலமாக்கள் الإسناد ஐ பற்றி கூறியவை:-
وقال عبد الله بن المبارك رحمه الله: “الإسناد من الدين، ولولا
الإسناد لقال من شاء ما شاء”. رواه مسلم في مقدمة صحيحه
இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) :- இஸ்னாத் மார்க்கத்தில் உள்ளதாகும் . அது இல்லையென்றால் யார் வேண்டுமானாலும் தனக்கு தோன்றியதைக் கூறுவார்கள்.
سَمِعْتُ سُفْيَانَ الثَّوْرِيَّ , يَقُولُ : ” الَإسْنَادُ سِلَاحُ الْمُؤْمِنِ , فَإِذَا لَمْ يَكُنْ مَعَهُ سِلَاحٌ
, فَبِأَيِّ شَيْءٍ يُقَاتِلُ ؟ “
இமாம் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) – சனது தான் ஒரு முஃமினின் ஆயுதம். சனத் இல்லையென்றால் எந்த ஆயுதத்தை வைத்து அவர் போர் புரிவார்.
وقال الإمام الأوزاعي رحمه الله تعالى: (ما ذهاب العلم إلا ذهاب الإسناد
இமாம் அவ்சாயீ (ரஹ்) – இஸ்நாத் போகும் வரை தீன் மக்களிடமிருந்து போகாது.
ஆகவே இயன்றவரை ஹதீஸை சனதுடன் கூற முயற்சிக்க வேண்டும்.
இமாம் ஷுஃபா(الامام شعبة بن الحجاج) (ரஹ்) – சனத் இல்லாமல் அறிவிக்கப்படும் ஹதீஸ் கடையில் விற்கப்படும் காய்கறியைப் போன்றது.
சமீபத்தில் வாழ்ந்த மொரோக்கோவை சேர்ந்த அறிஞர் அப்துல் ஹை அல் கத்தானி (عبد الحي الكتاني) – சனத் இல்லையென்றால் யூத கிறிஸ்தவர்கள் தங்கள் வேதங்களில் விளையாடியது போல் இஸ்லாத்தில் விளையாடப்பட்டிருக்கும்.
ஆரம்ப காலங்களில் ஸஹாபாக்கள் சனதை பற்றி கேட்டதில்லை. உஸ்மான் (ரலி) அவர்களது மரணத்திற்குப் பின்னரே அதைப்பற்றி கேட்க ஆரம்பித்தனர்.
தாபியீ ஒருவர் கூறினார்கள் – நாங்கள் பஸராவில் இருந்தோம். எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சில தகவல்கள் வரும், ஆனால் நாங்கள் அதை நம்பாமல் மதீனாவிற்கு சென்று அங்குள்ள சஹாபாக்களிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே அதை ஏற்றுக் கொள்வோம்.
இமாம் அபூதாவூத் அத் தயாலிஸீ (أبو داود الطيالسي) – நாங்கள் நான்கு பேரிடமிருந்து ஹதீஸை கற்றுக் கொள்வோம்
1. இமாம் ஸுஹ்ரீ (امام الزهري)
2. இமாம் கத்தாதா (امام قدادة)
3. இமாம் அபூ இஸ்ஹாக் (امام ابو اسحاق)
4. இமாம் அஹ்நஷ்
சோதனை செய்யப்பட்ட ஹதீஸ்:
و من هذا ما يرويه ابن عبد البر عن الشعبى عن الربيع ابن خشيم قال: ((من قال
لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد يحيى و يميت، و هو على كل
شيئ قدير، عشر مرات كن. له كعتق رقاب أو رقبة : قال الشعبى فقلت للربيع بن
خشيم: من حدثك بهذا الحديث؟ فقال: عمرو بن ميمون الأودية فلقيت عمرو بن
ميمون، فقلت: من حدثك بهذا الحديث؟ فقال: عبد الرحمن بن أبى ليلى. فلقيت ابن
أبى ليلى فقلت: من حدثك؟ قال: أبو أيوب الأنصارى صاحب رسول صلى الله عليه
وسلم قال يحيى بن سعيد: ((و هذا أول ما فتش عن الإسناد))
இஸ்லாமிய வரலாற்றில் முதல் முதலில் சனத் சோதிக்கப்பட்ட அறிவிப்பாளர் தொடர் :
இப்னு அப்துல் பர்(إبن عبد البر)
சுஹ்பா(الشعبى)
இப்னு ஹூசைம்(إبن خشيم)
அம்ரு இப்னு மைமூன்(عمرو بن ميمون)
அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா
(عبد الرحمن بن ابى ليلى)
அபூ அய்யூப் அன்சாரி(ابو أيوب الأنصارى )
முஹம்மது (ஸல்) (محمد ﷺ)