ஸீரா பாகம் – 18
உன் நபியை அறிந்துகொள்
❖ நபித்துவத்தின் 14 ஆவது ஆண்டு
சபர் மாதம் பிறை 27 இல் ஹிஜ்ரா புறப்பட்டு ரபியுல் அவ்வல் பிறை 8 திங்கள் பகலில் குபா வந்தடைந்தார்கள்.
குபாவில் நபியவர்கள் தங்குவதற்காக மஸ்ஜித் கட்டப்பட்டிருந்தது.
ஸூரத்துத் தவ்பா 9:108
لَا تَقُمْ فِيهِ أَبَدًا ۚ لَّمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَىٰ مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِ ۚ فِيهِ
رِجَالٌ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُوا ۚ وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ
ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் – நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது; அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது; அங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.
பிறகு வெள்ளியன்று காலையில் புறப்பட்டு வழியில் பனூ சஅது குடும்பத்தார் வசிக்கும் இடத்தில் ஜும்ஆ தொழுதுவிட்டு மதீனாவிற்குள் நுழைந்தார்கள்.